In cont of my earlier #Thread which was in English I am reproducing the same in Tamil lang for the better reach and wide audience. B’fore starting I would like to mention couple of Twitter I’d who was instrumental for this #Thread. Content shared by @anexcommie 1/1

Tamil translation credit @Speakwithsense1 தூர்தர்ஷனின் தமிழ்ச்செய்தி வாசிப்பாளரான திருமதி ஷோபனா ரவி அவர்கள் 17.03.2022 அன்று இட்ட முகநூல் பதிவு, இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டு பதிவிடப் பட்டுள்ளது.
கொஞ்சம் நீளமான பதிவுதான், எனினும் தாங்கள் தங்கள் நேரத்தைச் சிறிது ஒதுக்கத்தகுந்த 1/2
பதிவு இது. காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த என் பதிவு மற்றும் அதற்கு எனது காஷ்மீர் நண்பர்கள் மற்றும் பலர் அளித்த பின்னூட்டம் இவற்றின் அடிப்படையில்,  என்னுடைய பிராந்தியத்தில் (மாநிலத்தில்) பிராமணர்கள் எதிர்கொள்ள நேருகின்ற கஷ்டங்கள் குறித்தும் என் கருத்துக்களை முன்வைக்கிறேன் 1/3
இங்கு இந்துக்கள் மீதான வெறுப்பானது பிராமணர்கள் மீதான தாக்குதலாக பரிணமித்துள்ளது. இதற்கு ஒரே காரணம் பிராமணர்கள் அரசியல்ரீதியாக பலமற்ற எளிதான இலக்கு என்பதே. அவர்கள் இங்கே சிறுபான்மையினர். பதவியைப் பிடிக்க நினைக்கும் யாரும் அவர்கள் வாக்குகள் பற்றிக் கவலைப் படத்தேவையில்லாத அளவு 1/4
சிறிய வாக்கு வங்கி அவர்களுடையது.
எனவே அவர்கள் குடுமிகள் வெட்டப் படலாம், அவர்களது பூணூல்கள் துண்டாக்கப் படலாம்,  அவர்கள் கடவுளர்கள் கொச்சைப் படுத்தப் படலாம். எதிர்த்துப் போராடி, தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழக்கம் அவர்களுக்கு இல்லை. அப்படியே அவர்கள் குரல் எழுப்பினாலும், 1/5
அவர்களை எதிர்ப்போரின் காட்டுக் கூச்சலில் அவர்கள் குரல் வலுவிழந்துவிடும்.
 
இங்கே அந்தப் பிராமணர்கள் குற்றம் சாட்டப் படுவது அவர்கள் சாதியையும் தீண்டாமையைப் பின் பற்றினார்கள் என்பதுதான். இருக்கலாம். என் மாமியார், தான் பூஜையை முடிக்கும்வரை (கழுவப்படாத, துவைக்கப்படாத) சுத்தமற்ற 1/6
எதையும் தொடவே மாட்டார்கள். அவர்கள் மீது நாங்கள் யாராவது பட்டுவிட்டால் அவர்கள் திரும்பவும் குளித்தே ஆகவேண்டும். எங்கள் குடும்பத்தினருடன் கூட இதே நடைமுறைதான் பின்பற்றப் பட்டது.  உயிர்க்கொலை என்பது நிந்தனைக்குரியது. என் மகள்கள் வீட்டில் முட்டையைச் சமைத்ததற்காக அவர்களை ரவி 1/7
எவ்வளவு கண்டித்தார் என்பது எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது.
அந்தப் பாத்திரங்களை மறுபடியும் பயன்படுத்தத் தடை என்பதால் அதை (பணிப்பெண்ணுக்குக்) கொடுக்க நேர்ந்தது. எங்கள் வீட்டில் யாரும் புகை பிடிக்க முடியாது. ஒருமுறை விருந்தினர்கள் வந்தால் தேவைப்படும் என்று நான் சாம்பல் தட்டு 1/8
(Ashtray) வாங்க முனைந்தபோது ரவி வீட்டினுள் யாரும் புகை பிடிக்க அவசியம் இல்லை என்று கூறி என்னைத் தடுத்துவிட்டார். இதே நடப்புதான் பெரும்பாலான பிராமண வீடுகளில் இருக்கும்.
இது அவர்களுடைய நல்லொழுக்கம் மற்றும் அவர்களது வாழ்க்கை முறை. ஆனால் நான் ஒன்றைக் கூறியே ஆகவேண்டும்: 1/9
இதை அவர்கள் தங்களுக்கும் வைத்துக் கொண்டார்களே தவிர பிறரைத் தொந்தரவு செய்யவில்லை.
அவர்கள் ஒருபோதும் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு பிறரை அச்சுறுத்தவோ அடக்கியாளவோ செய்யவில்லை. பெரும்பாலானவர்கள் அறிஞர்களாகத் திகழ்ந்தார்கள்,  கல்வி கற்பிக்கும் ஆசான்களாக இருந்தார்கள். 1/10
அவர்கள் சமூகத்தில் ஆசிரியர்களாக, அறிவியல் வல்லுனர்களாக, இசைக் கலைஞர்களாக, சமூக சீர்திருத்தவாதிகளாக, மொழியியல் நிபுணர்களாக, கவிஞர்களாக, வழக்கறிஞர்களாக, நிர்வாகிகளாக ஆனார்கள்.
ஆம். அவர்கள் சாதி உணர்வு கொண்டவர்கள்தான். வெள்ளாரர்களும், செட்டியார்களும், முதலியார்களும்,நாயுடுகளும் 1/11
கவுண்டர்களும், நாடார்களும், யாதவர்களும், தேவர்களும், வன்னியர்களும் கூடத்தானே அப்படி இருக்கிறார்கள்?
மற்றவர்கள் வாக்கு வங்கிகள். அவர்களைப் பகைத்துக்கொள்ள முடியாது. ஆனால் ஈவெ ராமசாமி நாயக்கரின் கொள்கைகளை முன்னெடுத்து அதிகாரத்தைப் பிடித்த 1/12
இயக்கத்திற்கு, சாதி எதிர்ப்பு என்ற பெயரில் தாக்க ஒரு எதிர்ப்பே காட்டாத ‘குத்துச்சண்டைப் பயிற்சிக்கு உதவும் மணல் மூட்டை’ போன்ற ஒன்று தேவைப்பட்டது. அதற்காகத்தான் அவர்கள் அமைதி விரும்பிகளான, பலவீனமான கீழ் மத்திம வர்க்கத்தவர்களாகிய பிராமணர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.
1/13
பிராமணர்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல் நோக்கம் உள்ள, ‘சமூகப் போராளிகளால்’ புறக்கணிக்கப் படுகிறார்கள்;  நிந்திக்கப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள்.
நான் அவர்களைக் குறித்து, அவர்கள் எதிர்காலம் குறித்து, அவர்கள் பாதுகாப்பைக் குறித்து அச்சம் கொள்கிறேன். அவர்களுடைய, கடின 1/14
உழைப்பாளிகளான குழந்தைகள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளோ, அவர்களுடைய திறமைகளை மதிக்கும் அரசோ இல்லாததால் விரக்தி அடைந்துவிட்டார்கள். தகுதிக்கேற்ற அங்கீகாரம் இங்கே இல்லை. இது வரவேற்கத் தகுந்த நிலைமை இல்லை. இந்துக்களில் அவர்கள் மட்டுமே இந்த நெஞ்சைப் பிளக்கக்கூடிய இத்தகைய 1/15
பாரபட்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான உயர் மத்தியதர பிராமணர்கள், அவர்கள் பெற்றோர்கள் பட்ட அளவற்ற இன்னல்களைத் தாண்டி, வெளிநாடுகளில் உயர் பதவிகளில் நிலைபெற்றுவிட்டனர். அமைதியான காஷ்மீர் பண்டிட்கள், படுகொலை செய்யப்பட்டு, தங்கள் தாய் மண்ணில் இருந்து துரத்தப் 1/16
துரத்தப் பட்டிருக்கிறார்கள் எனும்போது, இங்குள்ள கீழ் மத்தியதர பிராமண வகுப்பினரின் நிலை என்ன ஆகும்?
நான் ஒரு வங்கிக்கு சமீபத்தில் சென்றிருந்த பொழுது ஒரு பிராமண வகுப்பைச் சேர்ந்த இளம்பெண் எழுத்தர், ஒரு செருக்கு மிகுந்த இந்து அல்லாத ஒரு மேலாளரின் 1/17
முன் பீதியுடன் நின்றிருந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது.
எனக்கு அச்சமாக உள்ளது. மிகவும் தாமதம் ஆவதற்கு முன் நாம் விழித்தாக வேண்டும், எதையும் எதிர்கொள்ளவும், நமக்குச் சாதகமான நிலையை அடையவும் தயாராக வேண்டும் 1/n #brahmins @raaga31280 Please share it on your TL🙏

More from All

How can we use language supervision to learn better visual representations for robotics?

Introducing Voltron: Language-Driven Representation Learning for Robotics!

Paper: https://t.co/gIsRPtSjKz
Models: https://t.co/NOB3cpATYG
Evaluation: https://t.co/aOzQu95J8z

🧵👇(1 / 12)


Videos of humans performing everyday tasks (Something-Something-v2, Ego4D) offer a rich and diverse resource for learning representations for robotic manipulation.

Yet, an underused part of these datasets are the rich, natural language annotations accompanying each video. (2/12)

The Voltron framework offers a simple way to use language supervision to shape representation learning, building off of prior work in representations for robotics like MVP (
https://t.co/Pb0mk9hb4i) and R3M (https://t.co/o2Fkc3fP0e).

The secret is *balance* (3/12)

Starting with a masked autoencoder over frames from these video clips, make a choice:

1) Condition on language and improve our ability to reconstruct the scene.

2) Generate language given the visual representation and improve our ability to describe what's happening. (4/12)

By trading off *conditioning* and *generation* we show that we can learn 1) better representations than prior methods, and 2) explicitly shape the balance of low and high-level features captured.

Why is the ability to shape this balance important? (5/12)

You May Also Like

#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்