கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி 38/39 MP வெற்றி பெற்ற திமுக வரும் 2021 தேர்தலில் ஏன் படு தோல்வி அடைய போகிறது ?👇

❎சென்ற தேர்தலில் திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் என்று அனைவரையும் நம்ப வைத்தது

✅மோடி அரசு இன்னும் 3 வருடம் இருக்க போகிறது, மீண்டும் 2024 மோடி அரசு அமைவதற்கே வாய்ப்புள்ளது
✳️ திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது 1996-2001 & 2006-2011 மத்தியிலும் கூட்டணி ஆட்சியில் இருந்தது.
❎ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்ற பிம்பம்

✅54 MPs மட்டுமே வெல்ல முடிந்த ராகுல், பிரதமராக வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிவர்
❎திமுக தேர்தல் அறிக்கை

✅கேள்வி தாள் தேர்வுக்கு முன்னரே கிடைத்த மாணவன் போல் எடப்பாடி அரசு பதிலை சிறப்பாக எழுதி விட்டது.

✅கூட்டுறவு விவசாய கடன் தள்ளுபடி
✅மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி
✅நகை கடன் தள்ளுபடி
⛈️பருவ நிலை

🌊எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் மேட்டூர் ஆணை குறித்த தேதியில் திறந்து விட பட்டது.

🌊குளங்கள் ஏரிகள் சரியான சமயத்தில் பராமரிக்கப்பட்டதின் மூலம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது
⚖️சமூக நீதி

⚖️தேவேந்திர குல வெள்ளாளர்கள் சட்ட மசோதா

⚖️வன்னியர்கள் 10.5% உள் ஒதுக்கீடு

⚖️முத்தரையர்களுக்கு முக்கியத்துவம்
❎மோடி தமிழர்களுக்கு எதிரானவர்

✅48,63,354 விவசாயிகளுக்கு 7 தவணைகளாக ₹2000 என இதுவரை ₹14000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது
❎மோடி தமிழர்களுக்கு எதிரானவர்

✅31 லட்சம் புதிய சமையல் எரிவாயு இணைப்பு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது

✅👆அனைவருக்கும் சென்ற வருடம் 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது

✅தமிழ்நாட்டில் - நாட்டிலேயே உச்ச பட்சமாக 98% குடும்பங்கள் இன்று சமையல் எரிவாயு பயன் படுத்துகிறார்கள்
❎மோடி தமிழர்களுக்கு எதிரானவர்

✅ மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1 கோடி 60 லட்சம் பேருக்கு ₹5.0 லட்சம் வழங்க பட்டுள்ளது.

✅இந்தியாவிலேயே அதிக பட்சமாக - தமிழ்நாட்டில் 24.56 லட்சம் பேருக்கு ₹3239.5 கோடிக்கு சிகிச்சை அளிக்க பட்டுள்ளது
❎மோடி தமிழர்களுக்கு எதிரானவர்

✅1 .30 கோடி கூலி தொழிலாளர்கள் ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள்
❎மோடி தமிழர்களுக்கு எதிரானவர்

🚰14,19,681 புதிய குடிநீர் இணைப்புகள் கடந்த 2 வருடத்தில் தமிழ்நாட்டில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது

More from All

#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை


தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு

நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்

இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்


குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது
https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்

You May Also Like

#தினம்_ஒரு_திருவாசகம்
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்

பொருள்:
1.எப்போது ஆரம்பித்தது என அறியப்படமுடியாத தொலை காலமாக (தொல்லை)

2. இருந்து வரும் (இரும்)


3.பிறவிப் பயணத்திலே ஆழ்த்துகின்ற (பிறவி சூழும்)

4.அறியாமையாகிய இடரை (தளை)

5.அகற்றி (நீக்கி),

6.அதன் விளைவால் சுகதுக்கமெனும் துயரங்கள் விலக (அல்லல் அறுத்து),

7.முழுநிறைவாய்த் தன்னுளே இறைவனை உணர்த்துவதே (ஆனந்த மாக்கியதே),

8.பிறந்து இறக்கும் காலவெளிகளில் (எல்லை)

9.பிணைக்காமல் (மருவா)

10.காக்கும் மெய்யறிவினைத் தருகின்ற (நெறியளிக்கும்),

11.என் தலைவனான மாணிக்க வாசகரின் (வாதவூரெங்கோன்)

12.திருவாசகம் எனும் தேன் (திருவா சகமென்னுந் தேன்)

முதல்வரி: பிறவி என்பது முன்வினை விதையால் முளைப்பதோர் பெருமரம். அந்த ‘முன்வினை’ எங்கு ஆரம்பித்தது எனச் சொல்ல இயலாது. ஆனால் ‘அறியாமை’ ஒன்றே ஆசைக்கும்,, அச்சத்துக்கும் காரணம் என்பதால், அவையே வினைகளை விளைவிப்பன என்பதால், தொடர்ந்து வரும் பிறவிகளுக்கு, ‘அறியாமையே’ காரணம்

அறியாமைக்கு ஆரம்பம் கிடையாது. நமக்கு ஒரு பொருளைப் பற்றிய அறிவு எப்போதிருந்து இல்லை? அதைச் சொல்ல முடியாது. அதனாலேதான் முதலடியில், ஆரம்பமில்லாத அஞ்ஞானத்தை பிறவிகளுக்குக் காரணமாகச் சொல்லியது. ஆனால் அறியாமை, அறிவின் எழுச்சியால், அப்போதே முடிந்து விடும்.