Sri Ananthalwar, Sri Chakrathalwar and Sri Garudalwar.

"ஸ்ரீ சக்கரம்" என்னும் "ஸ்ரீ சுதர்ஸனம்" எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!

அவர் தம் வலது திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.

"ஸ்ரீ அனந்தன்" என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.
பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.
"ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார்" என இவர்கள் மூவர்கள் மட்டுமே, பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.
நாராயணா ஹரி நாராயணா!

More from sriram

திருஎழு கூற்றிருக்கை - திருமங்கை ஆழ்வார்
===================================
"திரு எழு கூற்றிருக்கை" என்பது தமிழ் யாப்பு வகைகளில் மிகக் கடினமானது.

இதைச் "சித்திரகவி" என்றும் அழைப்பர்.


கவிதை முழுக்க முழுக்க திருக்குடந்தைப் பிரானின் பெருமையையும் குடந்தையின் இயற்கைக் காட்சிகளையும் காணலாம்.

பக்தியை எண்களில் வடித்து வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்பாசுரம் ஓர் எடுத்துக்காட்டு.

"செல்வம் மல்குதென் திருக்குடந்தை
அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம! நின் அடியிணை பணிவன்
வரும் இடர் அகல - மாற்றோ வினையே"

(அரவு அமளி = பாம்புப் படுக்கை)

என்று துன்பங்களைக் களைந்து அருள் தரும்படி பாசுரம் நிறைவு பெறுகின்றது.

More from All

You May Also Like