Authors PALRAJ T

7 days 30 days All time Recent Popular
ராவணனை அழித்த பிறகு,போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்...!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது...!!
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்,
அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,

ஸ்ரீராமபிரான்... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!


உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!
“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!
ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி,
கணவனை_இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் ,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!

ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!!
ஆச்சரியப்பட்டேன்.....!!

இங்கே நீ ,
என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......!

என் கணவரிடம் கூட இத்தகைய பண்பு இல்லை

ரகு குலத்தில் உதித்த ராமன் ,
மனிதன் அல்ல.....!!
உலகைக் காக்கும் பரம்பொருள்...!!
விஸ்வரூபன்.....!!
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.....!!
அவன் வேதத்தின் சாரம்.....!!

ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்....!!

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்.....!!

அவர் கேட்கவில்லை.....!!
உன் வெற்றிக்கு காரணம்,
என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்....!!

அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை.....!!
அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.....!!
#என்று_விழிக்குமோ_ஹிந்து_சமூகம்

ஆளும்/ஆண்ட அரசின் ஹிந்துக்கள் பண்டிகைகள் தொடர்பான ஒரு சார்பு கட்டுப்பாடுகளும்/தடையும்.

தற்போது ஆளும் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய ஒரே குறி ஹிந்து மத தாக்குதல் என்கிற போக்கில் தான் பயணம் செய்கிறது.


அதற்கு இன்றுவரை வந்த எந்த பண்டிகையும் தப்பவில்லை. வரும் பண்டிகைகளும் தப்ப போவதும் இல்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்துக்கள் பண்டிகையை தடை செய்யும் அல்லது கட்டுப்பாடு விதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன.

ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்பது மட்டும் உண்மை.

இவர்களுக்கு மட்டும் இந்துக்கள் பண்டிகையான போகி பண்டிகையில் ஆரம்பிக்கும் அடாவடி கட்டுப்பாடுகள் கார்த்திகை வரை இருக்கும்.

1. #போகி பண்டிகை

சுற்றுசூழல் பாதிப்பு என முழக்கம் இடுவது. ஆனால் தினசரி தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை பற்றி வாயை திறக்க மாட்டார்கள்.

2.#பொங்கல் பண்டிகை

திமுக இது தான் தமிழ் புத்தாண்டு என முரண்பட்ட முன்னெடுப்பை முன் வைப்பது

இதில் திமுக நிலைப்பாடு இன்னும் வேடிக்கையானது. சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கிறுக்கு தனங்களை அரங்கேற்றம் செய்வது.கடவுள் இல்லை என்பவர்கள் யாருக்கு பொங்கல் வைத்து யாருக்கு நன்றி சொல்கிறார்கள்