Authors Sriram

7 days 30 days All time Recent Popular
பசுவும், புண்ணியங்களும்:

* பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

* பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.


* பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும்.
இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே 'ஆவுரஞ்சுக்கல்' அமைத்தனர்.

* பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது.
இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும்.

பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

* `மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது.

* பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

* மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்

கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,

வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,

ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. (2.2.11)

(நம்மாழ்வார் - திருவாய்மொழி - இரண்டாம் பத்து - இரண்டாந் திருமொழி)


Eththa Ezulakum konda* kOlak
kooththanai,* kurukoorchchadakOpan_chol,*
vaayththa aayiraththuL* ivaipaththudan,*
Eththavallavarkku* illaiyOr _oonamE. (2.2.11)

(Swamy Nammazhwar in THIRUVAIMOZHI)

Meaning:

அனைவரும் வியந்து போற்றித் துதிக்க, அனைத்து உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் அளந்து கொண்ட அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து,

குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபன் நம்மாழ்வார் அருளிச் செய்த,

உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த
ஆயிரம் பாசுரங்களில் அமைந்த இந்தப் பத்து பாசுரங்களையும்,

பொருளுணர்ந்து பாடி, எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்கு, எந்நாளும் ஒரு குறைவுமில்லை.

The Thrivikraman is the One who meassured the entire Universe in one step and was hailed for such an act.