🌹🌺 “""" நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்ட நாத்திக நண்பன் - விளக்கும் எளிய கதை 🌹🌺
-----------------------------------------------------------------

🌺 சிவாவும் செல்வாவும் நெருங்கிய நண்பர்கள், செல்வா நாத்திகன், வாய்

ஜால திறமையுடைவன், சிவா தீவிர கிருஷ்ண பக்தன். செல்வா மேடையில் பிரசங்கம் செய்வதோ, "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை என்பதே வேலை.

🌺எல்லா மதத் தலைவர்களும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால திறமையுடன்
சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருப்பான்.
🌺செல்வாவுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்று அழைத்தான்.
🌺அப்போது நண்பன் சிவா மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான்.

🌺"நண்பா... என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் செல்வா.

🌺பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே
பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த பின்பு நாத்திக நண்பனை நோக்கி, "பழம் இனிப்பாய் இருக்கிறதா?" எனக் கேட்டான்.

🌺"பைத்தியக்காரனே, நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா, புளிப்பா என்று எவ்வாறு
சொல்லமுடியும்" என்றான் நாஸ்திகன் செல்வா ஆங்காரத்துடன்.

🌺அதற்கு சிவா "கடவுள் நல்லவர் என்பதை நீ ருசித்துப்பார்த்தால் தானே உனக்குத் தெரியும். ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்" என்று சொல்லவே ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரஞ் செய்தார்கள். செல்வா தலைகுனிந்து போனான்

🌺*பகவத்கீதை &
ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேதசாஸ்த்திரங்களை படிக்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் பரம்பொருள் என எப்படி அறிய முடியும்.

🌺பலர் தவறான பாதையில் போக முக்கியமான காரணம் வேத சாஸ்த்திரங்களை படிப்பதில்லை, எனவே "நானே இறைவன்" என்றும் பிதற்றுகிறார்கள்.

🌺பலர் ஏமாற்றும் நபர்களிடம்
மாட்டிக்கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பொற்பாதம் அடையாமல் மீண்டும் மீண்டும் ஜடவுலகிலேயே பிறவி எடுக்கிறார்கள்.

🌺நாமும் எப்போதும் பகவான் புகழை கீர்த்தனம் செய்து கொண்டு, திடமான உறுதியுடன் முயன்று கொண்டு, வந்தனை செய்தபடி, பராந்தாமனை வழிபடுவோம் 🌹🌺

More from All

You May Also Like

THE MEANING, SIGNIFICANCE AND HISTORY OF SWASTIK

The Swastik is a geometrical figure and an ancient religious icon. Swastik has been Sanatan Dharma’s symbol of auspiciousness – mangalya since time immemorial.


The name swastika comes from Sanskrit (Devanagari: स्वस्तिक, pronounced: swastik) &denotes “conducive to wellbeing or auspicious”.
The word Swastik has a definite etymological origin in Sanskrit. It is derived from the roots su – meaning “well or auspicious” & as meaning “being”.


"सु अस्ति येन तत स्वस्तिकं"
Swastik is de symbol through which everything auspicios occurs

Scholars believe word’s origin in Vedas,known as Swasti mantra;

"🕉स्वस्ति ना इन्द्रो वृधश्रवाहा
स्वस्ति ना पूषा विश्ववेदाहा
स्वस्तिनास्तरक्ष्यो अरिश्तनेमिही
स्वस्तिनो बृहस्पतिर्दधातु"


It translates to," O famed Indra, redeem us. O Pusha, the beholder of all knowledge, redeem us. Redeem us O Garudji, of limitless speed and O Bruhaspati, redeem us".

SWASTIK’s COSMIC ORIGIN

The Swastika represents the living creation in the whole Cosmos.


Hindu astronomers divide the ecliptic circle of cosmos in 27 divisions called
https://t.co/sLeuV1R2eQ this manner a cross forms in 4 directions in the celestial sky. At centre of this cross is Dhruva(Polestar). In a line from Dhruva, the stars known as Saptarishi can be observed.