ஹரஹரமஹாதேவா
பாலி (இந்தோனேசியா)
இந்துக்களின் சொர்க பூமி
உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் உள்ள ஒரூ தீவுதான் பாலி (BALI).
இங்கே 93சதவீத மக்கள் இந்துக்கள். 42லட்சம் இந்துக்களின் தாயகமாக பாலி விளங்குகிறது.
ஒருகாலத்தில் ஹிந்துராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், இஸ்லாமிய படையெடுப்பிற்கு பின் பெரும்பான்மையான மக்கள்
முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.
இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit )எனும் கடைசி இந்து மன்னரை வீழ்த்தியபிறகு இந்து மதத்தைவிட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலி தீவுக்கு குடிபெயர்ந்தனர்
பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.
1. இங்கே ஒவ்வொரு மார்ச் மாதத்தில் ஒருநாள் மௌன விரதம் கடைபிடிக்கபடுகிறது.
Nyepi day என சொல்கிறார்கள்.
மார்ச் 12ம்தேதி இந்த மௌனதினம் வருகிறது.
இந்துகளின் பண்டிகைபோன்ற அந்த நாளில் இந்தோனேசியா எங்கும் விடுமுறை அளிக்கபடுகிறது.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை எந்த போக்குவரத்தும் இருக்காது.
பன்னாட்டு விமானநிலையமான Denpasar (bali) விமான நிலையம்கூட மூடப்பட்டு இருக்கும்.
யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.
வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்
2.பாலியில் இருக்கும் இந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான் பாலி பள்ளிகளில் இன்றும்கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன அகஸ்திய, மார்கண்டேய,பரத்வாஜ ரிஷிகளைபற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில் ரிஷிகளை பற்றி பாலி குழந்தைகள்கூட தெரிந்துவைத்து இருக்கிறார்கள்